நடிகை திவ்யாவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
கர்நாடகாவில் எசியா நெட் நிறுவனத்துக்கு சொந்தமான சுவர்னா செய்தி தொலைக்காட்சியில் கடந்த 2013ம் ஆண்டு ஒளிபரப்பான ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான செய்தியில் திவ்யா ஸ்பந்தனாவுக்கும் தொடர்பு இருப்பதாக ஒளிப்பரப்பட்டுள்ளது. அதற்கு எதிராக திவ்யா, பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் "இந்தச் செய்திகளை ஒளிபரப்பியதன் மூலம் சுவர்ணா செய்தி நிறுவனம் இதழியல் நெறிகளை மீறிவிட்டது. திவ்யாவுக்கு இழப்பீடாக 50 லட்ச ரூபாய் வழங்கவேண்டும்" என்று தீர்ப்பளித்துள்ளது.